YouVersion Logo
Search Icon

நாகூம் முன்னுரை

முன்னுரை
இப்புத்தகம் கி.மு. 7 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. அசீரியாவினதும் அதன் தலைநகரமான நினிவேயினதும் அழிவைக் குறித்த இறைவாக்கே இந்தப் புத்தகம். அசீரியர் இஸ்ரயேலின் வட அரசான சமாரியாவை கி.மு. 722 இல் அழித்தார்கள். அதேபோல் அவர்களும் தங்கள் அகந்தையின் நிமித்தமும், கொடுமையின் நிமித்தமும் கி.மு. 612 இல் அழிக்கப்பட்டார்கள். கொடுமை, கொலை, பொய், துரோகம், மூட நம்பிக்கை, அநீதி ஆகியவையே அவர்களுடைய அழிவுக்குக் காரணம் என்று நாகூம் குறிப்பிடுகிறார். இறைவனின் பரிசுத்தம், நீதி, வல்லமை என்பவை இப்புத்தகத்தில் முக்கியமாக குறிப்பிடப்படுகின்றன.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in