YouVersion Logo
Search Icon

யூதா முன்னுரை

முன்னுரை
இக்கடிதம் கி.பி. 65 ஆம் ஆண்டிலிருந்து 70 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட காலத்தில் இயேசுவின் சகோதரன் யூதாவினால் எழுதப்பட்டது. இக்கடிதத்தை அவர் எல்லா விசுவாசிகளுக்கும் பொதுவாய் எழுதினார். விசுவாசிகள் சில பொய்யான வேத ஆசிரியர்களுக்கு எதிராகவும், அவர்கள் கொண்டுவரும் பொய்யான போதனைகளுக்கு எதிராகவும் உறுதியுடன் நிற்கவேண்டும் என்று அவர் புத்தி கூறி இதை எழுதினார். பொய்யான போதனையினால் வரக்கூடிய ஆபத்தையும், அது குறித்து திருச்சபை விழிப்பாய் இருக்கவேண்டியதின் அவசியத்தையும் அவர் இதில் வலியுறுத்தியிருக்கிறார்.

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in