YouVersion Logo
Search Icon

சங் 149

149
சங்கீதம் 149
1அல்லேலூயா, யெகோவாவுக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பரிசுத்தவான்களின் சபையிலே அவருடைய துதி வெளிப்படட்டும்.
2இஸ்ரவேல் தன்னை உண்டாக்கினவரில் மகிழவும்,
மகன்களாகிய சீயோன் தங்களுடைய ராஜாவில் சந்தோஷப்படட்டும்.
3அவருடைய பெயரை நடனத்தோடு துதித்து,
தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரை புகழ்ந்துபாட வேண்டும்.
4யெகோவா தம்முடைய மக்களின்மேல் பிரியம் வைக்கிறார்;
சாந்தகுணமுள்ளவர்களை இரட்சிப்பினால் அலங்கரிப்பார்.
5பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு,
தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
6தேசங்களிடத்தில் பழிவாங்கவும், மக்களைத் தண்டிக்கவும்,
7அவர்களுடைய ராஜாக்களைச் சங்கிலிகளாலும்,
அவர்களுடைய மேன்மக்களை இரும்பு விலங்குகளாலும் கட்டவும்,
எழுதப்பட்ட நியாயத்தீர்ப்பை அவர்கள்மேல் செலுத்தவும்,
8அவர்களுடைய வாயில் யெகோவாவை உயர்த்தும் துதியும்,
அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.
9இந்த மரியாதை அவருடைய பரிசுத்தவான்கள் அனைவருக்கும் உண்டாகும்.
அல்லேலூயா.

Currently Selected:

சங் 149: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in