திட்ட விவரம்
கவலை பற்றி வேதம் சொல்லும் 7 விஷயங்கள்மாதிரி
நிதி சிரமமோ, கஷ்டமான உறவோ அல்லது அதிக பணிச்சுமையோ, கவலை பல வடிவங்களில் நம் வாழ்வில் நுழைகிறது. அது நாள் முழுவதுமுள்ள சாதாரண அமைதியின்மையாக இருக்கலாம், தூக்கமில்லாத அமைதியற்ற இரவு அல்லது முழு அளவிலான கவலை தாக்குதலாக இருக்கலாம்.
நீங்கள் பதட்டத்துடன் போராடுகிற ஒரு கிறிஸ்தவர் என்றால், நீங்கள் உணரக்கூடிய முதல் விஷயங்களில் ஒன்று குற்றவுணர்வு. “நான் உண்மையிலேயே ஒரு கிறிஸ்தவனாக இருந்தால் நான் இப்படி உணர வேண்டுமா?” என்பது உங்கள் மனதில் அடிக்கடி நுழையக்கூடிய ஒரு எண்ணம். இன்றைய வசனத்தில், சங்கீதம் 55:22 இன் ஆசிரியர் நம்முடைய சுமைகளை கர்த்தருக்குக் கொடுக்கச் சொல்கிறார், அவர் நம்மைக் கவனித்துக்கொள்வார்.
நாம் வாழ்க்கையை முழுமையாக புரிந்துகொள்ள வேண்டும் என்று வசனம் சொல்லவில்லை என்பதைக் கவனியுங்கள். நாம் ஒருபோதும் பதட்டத்தை அனுபவிப்பதில்லை என்றும் அது கூறவில்லை. மாறாக, நம்மிடமுள்ள சுமைகளை இறைவனிடம் கொடுக்க கூறுகிறது
இங்கே ஒரு நல்ல செய்தி: அதைச் செய்வதற்கான பாதையில் நீங்கள் ஏற்கனவே இருக்கிறீர்கள்! இந்த வேத திட்டத்தைப் படிப்பதன் மூலம், உங்கள் கவலையை உங்களால் வெல்ல முடியாது என்பதையும், மாறாக உங்கள் பரலோகத் தகப்பனின் உதவி உங்களுக்குத் தேவை என்பதையும் ஒப்புக்கொள்கிறீர்கள். உங்கள் சூழ்நிலைகள் எதுவாக இருந்தாலும், இது ஒரு சிறந்த இடம் - கடவுளை நோக்கி ஓடுவது.
இன்று உங்களுக்கான எனது சவால் இங்கே: உங்கள் சுமைகளை இறைவனிடம் கொடுப்பதில் இன்னும் ஒரு படி ஐ எடுங்கள். இங்கே சில யோசனைகள் உள்ளன:
- இன்று 5 நிமிடங்கள் ஜெபத்தில் செலவழித்து, நீங்கள் கவலைப்படுவதை குறித்து கடவுளிடம் சொல்லுங்கள். நீங்கள் எப்படி உணருகிறீர்கள், அது உங்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பற்றி எழுதுங்கள்.
- நம்பகமான கிறிஸ்தவ நண்பருடன் சேர்ந்து உங்கள் கவலையைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள்.
ஜோர்டான் வைஸ்மேன்
YouVersion ஊடக உத்தியியலாளர்
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
ஒவ்வொரு நாளுக்கும் நம் வாழ்க்கையில் சிக்கலான புதிய சவால்களை அறிமுகப்படுத்தும் ஆற்றல் உள்ளது. அதே நேரத்தில் ஒவ்வொரு புதிய நாளும் நமக்கு அற்புதமான புதிய வாய்ப்புகளையும் வழங்கும். இந்த ஏழு நாள் தியானத்தில், YouVersion-இல் உ...
More