சங்கீதம்
சங்கீதம்
சங்கீத புத்தகத்தை வாசிப்பது எளிமையாக உற்சாகமூட்டக்கூடியதாக இருக்கும். நீங்கள் ஒரு கஷ்டமான நேரத்தின் ஊடாக சென்றுக்கொண்டிருக்கும் போது, சங்கீத புத்தகம் ஒரு ஆறுதலாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் இருக்கும்.
துதியின் அசாதாரண சக்தி: சங்கீதங்களிலிருந்து ஒரு 5 நாள் தியானம்
கவலை, பயம், தனிமை மற்றும் மனச்சோர்வு ஆகியவை கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக உயர்ந்துள்ளன. சங்கீதக்காரர்கள் இந்த உணர்ச்சிகளுக்கு அந்நியர்கள் அல்ல. இருப்பினும், அவர்கள் போற்றுவதற்கான அசாதாரண சக்தியைக் கட்டவிழ்த்துவிடக் கற்றுக்கொண்டனர். இந்த திட்டத்தின்மூலம் அமைதியாக இருப்பதற்கான ரகசியத்தை சங்கீதங்களிலிருந்து கண்டறியவும்.
சங்கீதங்களும் நீதிமொழிகளும்
சங்கீதம் புத்தகத்தை இரண்டு முறையும் நீதிமொழிகளை 12 முறைகளும் வாசிக்க உதவ YouVersion.com இலுள்ள நபர்களால் சங்கீதமும் நீதிமொழிகளும் திட்டம் தொகுக்கப்பட்டது. இந்த திட்டம் ஒரு வருடம் முழுவதும் வாசிப்பதற்கானது.
ஒரே விஷயம்
இந்த மனதை உலைக்கும் உலகில் இயேசுவுக்காக வாழ்வது என்னவென்று நாம் கண்டுபிடிக்கப் போகிறோம். இந்த உலகம் ஒரு நூறு மைல்கல் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது, நமக்குத் தேவையானதை விடக் கூடுதல் தகவல்கள் நம்முடைய கைகளில் உள்ளன. இது நவீன உலகத்தின் இயல்பா? இப்படிப் பறக்கிற சூழலில் நம்மை எப்படி நிதானப்படுத்திக் கொள்வது? சங்கீதம் 27:4 இல் அதற்கான பதில் உள்ளது – ஒரே ஒரு விஷயம், அந்திரேயா கார்ட்லெஜ்.
சங்கீதங்கள்
சங்கீதங்கள் கடவுளுடனான பல அனுபவங்களின் எண்ணங்களையும் உணர்வுகளையும் நமக்குத் தருகின்றன; ஒவ்வொன்றும் முதலில் இசைக்கு அமைக்கப்பட்டிருக்கலாம். நீங்கள் ஆடியோ படிப்பைக் கேட்கும்போதும், கடவுளுடைய வார்த்தையிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வசனங்களைப் படிக்கும்போதும் தினமும் சங்கீதங்கள் மூலம் பயணம் செய்யுங்கள்.
ஜீவன் மற்றும் சொஸ்தமாகுதல் சங்கீதத்தில் உள்ளது
ஒரு நாளைக்கு ஒரு சங்கீதம் மனச்சோர்வை விலக்கி வைக்கிறது. ஒரு நேரத்தில் ஒரு அத்தியாயம், சங்கீதம் மற்றும் நீதிமொழிகளில் இருந்து வாசித்து ஆராயுங்கள். நீங்கள் ஒவ்வொரு வாரமும் ஆறு சங்கீதங்களையும், நீதிமொழிகளில் ஒரு அத்தியாயத்தையும் ஏழு நாட்களுக்கு ஆறு மாதங்களுக்கு வாசிப்பீர்கள். பின்னர் நீங்கள் ஆறு மாதங்களில் இரண்டு புத்தகங்களையும் முடித்திருப்பீர்கள்.
மன்னிப்பு
சில சமயங்களில் மன்னிப்பது நமக்கு மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது. மனுஷீகத்தில் மன்னிப்பது கடினமாக இருக்கலாம் ஆனால் ஆண்டவரின் உதவியோடு அது கூடும். மன்னிப்பின்மை நம் வாழ்வில் பல ஆசீர்வாதங்களுக்கு தடையாக இருப்பது உங்களுக்கு தெரியுமா? வாருங்கள் வேதாகமத்தின் மூலம் மன்னிப்பைப் பற்றி ஆராய்வோம், கற்றுக்கொள்வோம்.
சங்கீதம் 94:18-19 எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம்
மிகுந்த கவலையின்போது, எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானம் நமக்குத் தேவைப்படுகிறது. உலகத்தையே மாற்றக்கூடிய யுத்தங்களுக்கு மத்தியில் நாம் இருந்து வந்தாலும், தேவனுடைய பரிபூரண சமாதானத்துக்குள் பிரவேசிப்பது எப்படி என்பதைப் புரிந்துகொள்ள இந்த 7 நாள் வாசிப்புத் திட்டமானது உங்களுக்கு உதவும். மேலும் இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆண்டவருடைய சமாதானத்தையும் நம்பிக்கையையும் பெறுவது எப்படி என்பதை பரிசுத்த ஆவியானவர் தேவ வார்த்தையிலிருந்து உங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிப்பார்.
சங்கீதங்களில் நம்பிக்கையைக் கண்டறிதல்
நமது அனுதின மன்னாவிலிருந்து பிரத்தியேகமாக தெரிவுசெய்யப்பட்ட இந்த 5 வாசிப்புகளிலிருந்து சங்கீதங்களின் நேர்மையான, மூல அதாவது மாற்றப்படாத, மற்றும் இதயபூர்வமான அழுகையின் பயணம் இது. தேவனுடனான உங்கள் சொந்த உரையாடலை ஆழமாக்கவும், அவர்பேரில் தங்கள் விசுவாசத்தை வைப்பவர்களுக்கு அவர் தருகின்ற நம்பிக்கையைக் கண்டுகொள்ளவும், திரும்பவும் திரும்பவும் தெளிவாகச் சித்தரிக்கப்பட்டுள்ள இயேசுவின் அன்பு, மீட்பு மற்றும் முன் ஏற்பாடுகளையும் கண்டுகொள்ளவும் இந்த சங்கீதக்காரர்களின் வார்த்தைகளைப் யன்படுத்திகொள்ளுங்கள். தமது ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும், நமது ஒவ்வொரு தேவையையும் நிறைவேற்றுகின்ற இரட்சகரின் நிமித்தம், பாதுகாப்பும், மனநிறைவும் மற்றும் மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வை வாழுவதற்கு இந்த சங்கீதக்காரர்கள் உங்களுக்கு ஊக்கமளிக்கட்டும்.