யோபு 29:1-5

யோபு 29:1-5 பரிசுத்த பைபிள் (TAERV)

யோபு அவனுடைய பேச்சைத் தொடர்ந்தான். யோபு: “தேவன் என்னைக் கண்காணித்துக் கவனித்து வந்தபோது, பல மாதங்களுக்கு முன்பு இருந்தாற்போன்று என் வாழ்க்கை அமையாதா என விரும்புகிறேன். அந்நாட்களில் தேவனுடைய ஒளி என் மீது பிரகாசித்ததால், நான் இருளின் ஊடே நடக்க முடிந்தது. தேவன் நான் வாழ வேண்டிய சரியான வழியைக் காண்பித்தார். நான் வெற்றிகரமானவனாகவும், தேவன் எனக்கு நெருங்கிய நண்பராகவும் இருந்த நாட்களை நான் விரும்புகிறேன். அந்நாட்களில் தேவன் என் வீட்டை ஆசீர்வதித்தார். சர்வ வல்லமையுள்ள தேவன் என்னோடிருந்தும், என் பிள்ளைகள் என்னருகே இருந்ததுமான காலத்தை நான் விரும்புகிறேன்.