ஏசாயா 59:10-11

ஏசாயா 59:10-11 பரிசுத்த பைபிள் (TAERV)

கண்கள் இல்லாத ஜனங்களைப்போன்றிருக்கிறோம். நாம் குருடர்களைப்போன்று சுவர்களில் மோதுகிறோம். இருட்டில் இருப்பதுபோல இடறிக் கீழே விழுகிறோம். பகலிலும்கூட நம்மால் பார்க்க முடிவதில்லை. மத்தியான வேளையில் நாம் மரித்தவர்களைப்போன்று விழுகிறோம். நாம் எல்லோரும் மிகுந்த துக்கத்தில் இருக்கிறோம். நாம் கரடிகள் மற்றும் புறாக்களைப்போன்று துக்க ஓசைகளைச் எழுப்புகிறோம். நாம் ஜனங்கள் நியாயமாயிருக்கும் காலத்திற்காக காத்திருக்கிறோம். ஆனால் இதுவரை நியாயமில்லை. நாம் காப்பாற்றப்படுவதற்காகக் காத்திருக்கிறோம். ஆனால், இரட்சிப்பு இன்னும் வெகு தொலைவில் உள்ளது.