சங்கீத புத்தகம் 5:1-6

சங்கீத புத்தகம் 5:1-6 TAERV

கர்த்தாவே, என் வார்த்தைகளைக் கேளும். நான் சொல்ல முயற்சிப்பதை புரிந்துகொள்ளும். எனது தேவனாகிய ராஜாவே, என் ஜெபத்தைக் கேளும். கர்த்தாவே, என் அன்பளிப்புகளை காலைதோறும் உமக்கு படைக்கிறேன். உம்மை உதவிக்காக நோக்குகிறேன், நீர் என் ஜெபங்களைக் கேளும். தேவனே, தீய ஜனங்கள் உம்மருகே வருவதை நீர் விரும்புகிறதில்லை. தீய ஜனங்கள் உம்மை ஆராதிக்க முடியாது. மூடர் உம்மிடம் வர இயலாது, தீமை செய்யும் ஜனங்களை நீர் வெறுக்கிறீர். பொய் கூறும் ஜனங்களை நீர் அழிக்கிறீர். பிறரைத் தாக்குவதற்காக இரகசியமாகத் திட்டமிடுவோரை கர்த்தர் வெறுக்கிறார்.

சங்கீத புத்தகம் 5:1-6 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்