மீகா 1:8-16

மீகா 1:8-16 TAERV

என்ன நிகழும் என்பதைப்பற்றி நான் மிகவும் துக்கப்படுவேன். நான் பாதரட்சையும் ஆடையும் இல்லாமல் போவேன். நான் ஒரு நாயைப்போன்று அழுவேன். நான் ஒரு பறவையைப்போன்று துக்கங்கொள்வேன். சமாரியாவின் காயங்கள் குணப்படுத்தப்பட இயலாது. அவளது (பாவம்) நோய் யூதா முழுவதும் பரவியிருக்கிறது. இது எனது ஜனங்களின் நகரவாசலை அடைந்திருக்கிறது. எருசலேமின் எல்லா வழிகளிலும் பரவியிருக்கிறது, இதனைக் காத்திடம் சொல்லவேண்டாம். அக்கோ என்னுமிடத்தில் கதறவேண்டாம். பெத்அப்ராவிலே புழுதியில் நீ புரளு. சாப்பீரில் குடியிருக்கிறவர்களே வெட்கத்துடன் நிர்வாணமாய் உங்கள் வழியிலே போங்கள். சாயனானில் குடியிருக்கிறவர்கள் வெளியே வரமாட்டார்கள். பெத்ஏசேலில் வாழ்கிறவர்கள் கதறுவார்கள். உங்களின் உதவியை எடுத்துக்கொள்வார்கள். மாரோத்தில் குடியிருக்கிறவளே பலவீனமாகி நல்ல செய்தி வருமென்று எதிர்ப்பார்த்திருந்தார்கள். ஏனென்றால், துன்பமானது கர்த்தரிடமிருந்து எருசலேமின் நகர வாசலுக்கு வந்திருக்கிறது. லாகீசில் குடியிருக்கிறவளே, உங்கள் இரதத்தில் விரைவாகச் செல்லும் குதிரையைப் பூட்டு. சீயோனின் பாவம் லாகீசில் தொடங்கியது. ஏனென்றால் நீ இஸ்ரவேலின் பாவங்களைப் பின்பற்றுகிறாய். எனவே, நீ மோர்ஷேக் காத்தினிடத்திற்கு கட்டாயமாக பிரிவு உபச்சார வெகுமதிகளைக் கொடுக்கவேண்டும். அக்சீபின் வீடுகள் இஸ்ரவேல் ராஜாக்களிடம் வஞ்சனை செய்யும். மரேஷாவில் குடியிருக்கிறவளே, நான் உனக்கு எதிராக ஒருவனைக் கொண்டு வருவேன். அவன் உனக்கு உரிய பொருட்களை எடுத்துக்கொள்வான். அதுல்லாமிற்குள் இஸ்ரவேலின் மகிமை (தேவன்) வரும். எனவே உனது முடியை வெட்டு, உன்னை மொட்டையாக்கிக்கொள். ஏனென்றால், நீ அன்பு செலுத்துகிற உன் குழந்தைகளுக்காக நீ கதறுவாய். நீ கழுகைப்போன்று முழுமொட்டையாக இருந்து உனது துக்கத்தைக் காட்டு. ஏனென்றால் உனது பிள்ளைகள் உன்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்படுவார்கள்.

மீகா 1:8-16 தொடர்பான இலவச வாசிப்புத் திட்டங்கள் மற்றும் தியானங்கள்