உபாகமம் 33:1-5

உபாகமம் 33:1-5 TAERV

மோசே மரிப்பதற்கு முன்பு, தேவனுடைய மனுஷனான அவன் இஸ்ரவேல் ஜனங்களுக்குக் கொடுத்த ஆசீர்வாதம் இதுதான். மோசே சொன்னான்: “சீனாயிலிருந்து கர்த்தர் வந்தார். கர்த்தர் சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமாகும் ஒளிபோன்று தோன்றினார். அவர் பாரான் மலையிலிருந்து ஒளி வீசும் வெளிச்சத்தைப் போன்று இருந்தார். கர்த்தர் 10,000 பரிசுத்தரோடு வந்தார். தேவனின் பலமிக்க படை வீரர்கள் அவரது பக்கத்திலேயே இருந்தார்கள். ஆம்! கர்த்தர் அவரது ஜனங்களை நேசிக்கிறார். அவரது பரிசுத்தமான ஜனங்கள் அனைவரும் அவரது கைக்குள் இருக்கிறார்கள். அவர்கள் அவரது காலடியில் இருந்து, அவரது போதனையைக் கற்கிறார்கள்! மோசே சட்டத்தை கொடுத்தான். அந்தப் போதனைகள் எல்லாம் யாக்கோபின் ஜனங்களுக்குரியது. அந்த நேரத்தில், இஸ்ரவேலின் ஜனங்களும் அவர்களது தலைவர்களும், ஒன்று கூடினார்கள். கர்த்தர் யெஷுரனுக்கு ராஜாவானார்!