ஆதியாகமம் 5:27-32

ஆதியாகமம் 5:27-32 TCV

மெத்தூசலா மொத்தம் 969 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான். அவன், “யெகோவா சபித்த நிலத்தில் நாம் பாடுபட்டு உழைக்கும்போது, இவன் நமக்கு ஆறுதலாயிருப்பான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். நோவா பிறந்த பிறகு, லாமேக்கு 595 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான். லாமேக்கு மொத்தம் 777 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான். நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான்.