சங் 97

97
சங்கீதம் 97
1யெகோவா ராஜரிகம்செய்கிறார்; பூமி பூரிப்பாகி,
திரளான தீவுகள் மகிழட்டும்.
2மேகமும் மந்தாரமும் அவரைச் சூழ்ந்திருக்கிறது;
நீதியும் நியாயமும் அவருடைய சிங்காசனத்தின் ஆதாரம்.
3நெருப்பு அவருக்கு முன்சென்று,
சுற்றிலும் இருக்கிற அவருடைய எதிரிகளைச் சுட்டெரிக்கிறது.
4அவருடைய மின்னல்கள் பூமியைப் பிரகாசிப்பித்தது;
பூமி அதைக்கண்டு அதிர்ந்தது.
5யெகோவாவின் பிரசன்னத்தினால் மலைகள் மெழுகுபோல உருகினது,
சர்வ பூமியினுடைய ஆண்டவரின் பிரசன்னத்தினாலேயே உருகிப்போனது.
6வானங்கள் அவருடைய நீதியை வெளிப்படுத்துகிறது;
எல்லா மக்களும் அவருடைய மகிமையைக் காண்கிறார்கள்.
7சிலைகளை வணங்கி,
விக்கிரகங்களைப்பற்றிப் பெருமைபாராட்டுகிற அனைவரும் வெட்கப்பட்டுப் போவார்களாக;
தெய்வங்களே, நீங்களெல்லோரும் அவரைத் தொழுதுகொள்ளுங்கள்.
8சீயோன் கேட்டு மகிழ்ந்தது; யெகோவாவே,
உம்முடைய நியாயத்தீர்ப்புகளினால் யூதாவின் மகள்கள் சந்தோஷப்பட்டார்கள்.
9யெகோவாவே, பூமி அனைத்திற்கும்
நீர் உன்னதமான தேவன்; எல்லா தெய்வங்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.
10யெகோவாவில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்;
அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி,
துன்மார்க்கர்களின் கைக்கு அவர்களைத் தப்புவிக்கிறார்.
11நீதிமானுக்காக வெளிச்சமும்,
செம்மையான இருதயமுள்ளவர்களுக்காக மகிழ்ச்சியும் விதைக்கப்பட்டிருக்கிறது.
12நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து,
அவருடைய பரிசுத்தத்தின் நினைவுகூருதலைக் கொண்டாடுங்கள்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங் 97: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்