சங் 67

67
சங்கீதம் 67
இசைக்கருவிகளை இசைக்கும் இராகத் தலைவனுக்கு ஒரு துதிப் பாடல்.
1தேவனே, பூமியில் உம்முடைய வழியும்,
எல்லா தேசங்களுக்குள்ளும் உம்முடைய இரட்சிப்பும் விளங்கும்படியாக,
2தேவனே நீர் எங்களுக்கு இரங்கி, எங்களை ஆசீர்வதித்து,
உம்முடைய முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச்செய்யும். (சேலா)
3தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
4தேவனே நீர் மக்களை நிதானமாக நியாயந்தீர்த்து, பூமியிலுள்ள மக்களை நடத்துவீர்;
ஆதலால் தேசங்கள் சந்தோஷித்து,
கெம்பீரத்தோடு மகிழக்கடவர்கள். (சேலா)
5தேவனே, மக்கள் உம்மைத் துதிப்பார்களாக;
எல்லா மக்களும் உம்மைத் துதிப்பார்களாக.
6பூமி தன்னுடைய பலனைத் தரும், தேவனாகிய எங்களுடைய தேவனே எங்களை ஆசீர்வதிப்பார்.
7தேவன் எங்களை ஆசீர்வதிப்பார்;
பூமியின் எல்லைகளெல்லாம் அவருக்குப் பயந்திருக்கும்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங் 67: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்