சங் 54

54
சங்கீதம் 54
தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
1தேவனே, உமது பெயரினிமித்தம் என்னைப் பாதுகாத்து,
உமது வல்லமையினால் எனக்கு நியாயம் செய்யும்.
2தேவனே, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டு, என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கேளும்.
3அந்நியர் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள்;
கொடியவர்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள்;
தேவனைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி வைப்பதில்லை. (சேலா)
4இதோ, தேவன் எனக்கு உதவி செய்பவர்;
ஆண்டவர் என்னுடைய ஆத்துமாவை ஆதரிக்கிறவர்களோடு இருக்கிறார்.
5அவர் என்னுடைய எதிரிகளுக்குத் தீமைக்குத் தீமையைச் சரிக்கட்டுவார்,
உமது சத்தியத்திற்காக அவர்களை அழியும்.
6உற்சாகத்துடன் நான் உமக்குப் பலியிடுவேன்;
யெகோவாவே, உமது பெயரைத் துதிப்பேன், அது நலமானது.
7அவர் எல்லா நெருக்கத்தையும் நீக்கி, என்னை விடுவித்தார்;
என்னுடைய கண் என்னுடைய எதிரிகளில் நீதி சரிக்கட்டுதலைக் கண்டது.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங் 54: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்