சங் 29

29
சங்கீதம் 29
தாவீதின் பாடல்.
1தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்;
கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
2யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்;
பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.
3யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது;
மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்;
யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
4யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது;
யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.
5யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது;
யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
6அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும்,
சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.
7யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
8யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்;
யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.
9யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து,
காடுகளை வெளியாக்கும்;
அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும்
யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
10யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்;
யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.
11யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்;
யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி,
அவர்களை ஆசீர்வதிப்பார்.

தற்சமயம் தேர்ந்தெடுக்கப்பட்டது:

சங் 29: IRVTam

சிறப்புக்கூறு

பகிர்

நகல்

None

உங்கள் எல்லா சாதனங்களிலும் உங்கள் சிறப்பம்சங்கள் சேமிக்கப்பட வேண்டுமா? பதிவு செய்யவும் அல்லது உள்நுழையவும்

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்