வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த சங்கீதம் 46:10

ஈஸ்டருக்குப் பிறகு மீட்டமைக்கவும்: போதகர்களுக்கான ஒரு யூவெர்ஷனின் இளைப்பாறுதல் திட்டம்

ஈஸ்டருக்குப் பிறகு மீட்டமைக்கவும்: போதகர்களுக்கான ஒரு யூவெர்ஷனின் இளைப்பாறுதல் திட்டம்

3 நாட்கள்

கிறிஸ்தவர்கள் இயேசுவின் உயிர்த்தெழுதலைக் கொண்டாடும் ஞாயிற்றுக்கிழமைகளில் மக்களின் வருகை பொதுவாக அதிகரிப்பதால், ஈஸ்டர் வார இறுதியானது தேவாலயத் தலைவர்களுக்கு ஆண்டின் மிகவும் பலனளிக்கும் மற்றும் சவாலான நேரங்களில் ஒன்றாகும். தேவாலய ஊழியர்கள் தேவன் செய்த அனைத்தையும் கொண்டாடுவதற்கும், தயார் படுத்துதல் மற்றும் செயல்படுத்தும் வேலைகளில் இருந்து ஓய்வு பெறுவதற்கும், இன்னும் வரவிருக்கும் ஊழியத்திற்கு மீட்டமைப்பதற்கும் இந்த ஆடியோ யூவர்ஷன் ரெஸ்ட் திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

கொந்தளிப்பான  நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல்

கொந்தளிப்பான நேரத்திலும் கூட நமது மனதின் சமநிலையைக் காத்துக் கொள்ளுதல்

3 நாட்கள்

நாம் ஒரு கொந்தளிப்பான காலத்தில் இருப்பதாக உணரும் போது மனநிலையை அமைதி நிலையில் காத்துக்கொள்வது சவாலானது என்பது விளங்கக் கூடிய கருத்துதான், ஆயினும் நிச்சயமாக இந்த ஒரு அமைதி நிலையை அடைந்து விடலாம். நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள்; சங்கீதம் 46:10a. ஒரு குழப்பமான மனதுக்கான ஒரே தீர்வு நம் நம்பிக்கை விசுவாசம் இவைகளில் அடங்கி இருக்கிறது.நம் மனதின் எண்ணங்களை அல்லது குழப்ப நிலைகளை தேவன் மேலேயே வைத்து, இந்தப் பாரச்சுமைகளை தேவனிடம் ஒப்படைத்து, அவருடைய மாறாத அன்பிலும், நம்மை விட்டு மாறாத அவருடைய பிரசன்னத்திலிருந்து வரும் தெய்வீக ஆறுதலையும் அமைதியையும் கண்டறிவதாகும்.

இளைப்பாற நேரம் ஒதுக்குவது

இளைப்பாற நேரம் ஒதுக்குவது

5 நாட்கள்

பணியில் மும்முரமாய் இருப்பதும் தொடர்ந்து பரபரப்பாய் இருப்பதும் நாம் வாழும் உலகத்தில் பெரிதும் மெச்சிக்கொள்ளப்படுகின்றது, அது மற்றவர்களுக்கு ஒரு சவாலாகவும் இருக்கக்கூடும். நம்முடைய பங்கையும் திட்டத்தையும் சரிவர செய்ய, நாம் இளைப்பாற கற்றுக்கொள்ளவேண்டும், அல்லது நாம் நேசிக்கும் நபர்களுக்கும் நம்முடைய இலக்குகளும் ஒன்றும் பங்களிப்புக்கு கொடுக்க முடியாமல்போகும். நாம் அடுத்த ஐந்து நாட்களை இளைப்பாறுதல் குறித்தும் நம்முடைய வாழ்வில் கற்றுக்கொண்ட பாடங்களை நம்முடைய வாழ்வில் எப்படி பொருத்திக்கொள்வது என்றும் கற்றுக்கொள்வோம்.

ஆழமாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை

ஆழமாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை

5 நாட்கள்

நியூயார்க் போதகர் ரிச் வில்லோடாஸ் வரையறுப்பது போல, ஆழமாக உருவாக்கப்பட்ட வாழ்க்கை என்பது ஒருங்கிணைப்பு, குறுக்குச் சந்திப்பு, பின்னிப்பிணைப்பு மற்றும் இசைவு ஆகியவற்றால் குறிக்கப்பட்ட வாழ்க்கை, ஆன்மீக உருவாக்கத்தின் பல அடுக்குகளை ஒன்றாகப் பிடித்துக் கொள்கிறது. இந்த வகையான வாழ்க்கை, ஜெபத்தில் கடவுளுடன் வாழ்க்கையை வளர்த்துக் கொள்ளும், திரும்ப கட்டுத்தலை நோக்கி நகரும், நீதிக்காக உழைக்கும், ஆரோக்கியமான உள்ளார்ந்த வாழ்க்கையைக் கொண்ட, நம் உடல்களையும் பாலுணர்வையும் பணியாளருக்கு பரிசுகளாகக் காணும் மக்களாக நம்மை அழைக்கிறது.

உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம்

உங்களுக்காக இங்கே காத்திருக்கிறேன், விசுவாசத்திற்கான ஒரு வருகையின் பயணம்

7 நாட்கள்

வருகை என்பது எதிர்பார்ப்புடனும் ஆயத்ததுடனும் காத்திருக்கும் காலமாகும். நீங்கள் கர்த்தரை நோக்கி காத்திருக்கும் போது உங்கள் காத்திருப்பு வீண் போகாது என்பதைக் கண்டறிய ஒரு வருகையின் பயணத்தில் போதகரும் எழுத்தாளருமான லூயி கிக்லியோவுடன் இணையுங்கள். இத்திட்டத்தின் கீழ் உள்ள வருகையின் பயணத்தின் மூலம் பரந்த விசுவாசத்தை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்பைப் பற்றிக் கொள்ளுங்கள். அடுத்த ஏழு நாட்களில் உங்கள் ஆத்துமாவுக்கு அமைதியையும் ஊக்கத்தையும் இந்த வருகையின் நாட்களுக்கான எதிர்பார்ப்பின் காலங்களில் கண்டுணருங்கள்!

மனஅழுத்தம்

மனஅழுத்தம்

9 நாட்களில்

வாழ்க்கை என்பது ஒவ்வொரு நபரும் கிட்டத்தட்ட சகிப்புத்தன்மையுடனும் விடாமுயற்சியுடனும் போராடி மேற்கொள்ளும் ஒரு பந்தயமாகும். சில சமயங்களில், குடும்பம், திருமணம், வேலை, போன்றவற்றிற்கு நாம் ஆற்ற வேண்டிய சகலவித கடமைகளாலும் நாம் நெருக்கப்பட்டு, மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறோம். நம்மையும் அறியாமல், போட்டியிட்டு வெற்றி பெற செயல்பட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறோம், அதனால் ஆண்டவர் நமக்குக் கொடுத்திருக்கும் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நாம் இழக்க நேரிடலாம். இந்தத் திட்டத்தில், இப்படிப்பட்ட நெருக்கடிகளை மேற்கொண்டு, ஆண்டவர் நமக்குக் கொடுக்கும் சமாதானம் மற்றும் சந்தோஷத்தால் நிரப்பப்படுவது எப்படி என்பதை நாம் காண்போம்.

குணமாக்கும் கிறிஸ்து

குணமாக்கும் கிறிஸ்து

25 நாட்களில்

பரிசுத்த வேதாகமம் ஒரு மத புத்தகம் அல்ல. அது தேவனுடைய வார்த்தை. வேதாகமத்தில், ஆசீர்வாதம் மற்றும் சாபங்கள் என இரண்டு முக்கியமான சக்திகளைக் குறித்து நீங்கள் நிறைய பார்க்கலாம். இதில், ஆசீர்வாதம் முற்போக்கான சக்தியாகவும், சாபங்கள் பிற்போக்கான சக்தியாகவும் இருக்கிறது. இந்த இரண்டு சக்திகளும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு மிகவும் வல்லமையானவை என்று வேதம் போதிக்கிறது. வாழ்க்கையில் ஆசீர்வாதம் வேண்டும் என்று எல்லோரும் விரும்பினாலும், சாபம் போன்ற சூழ்நிலைகள் அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்டு, தேவன் அவர்களுக்கு வைத்திருக்கிற சிறந்த காரியங்களை அவர்கள் பெற்று அனுபவிக்க முடியாதபடி அவைகளைக் களவாடுவதைக் கண்டு உள்ளம் வேதனைப்படுகிறது. வேதாகமம், இந்த இரண்டு சக்திகளைக் குறித்த சில உண்மைகளைக் கூறுவது மட்டுமல்ல, எவ்வாறு சாபத்திலிருந்து விடுதலையாகி ஆசிர்வாதத்தில் வாழ்வது என்பதைக் குறித்தும் போதிக்கிறது.