இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எபிரெயர் 10:21

தேவன் நம்முடன் - அட்வெந்து கால வேதபாடத் திட்டம்
5 நாட்கள்
சிறந்த காலங்களில் நம் உலகமானது உறுதி இல்லாத, தலைகீழானதாகத் தோன்றுகிறது. தேவ குமாரனாகிய இயேசு மட்டும் இல்லை என்றால், நமக்கு நம்பிக்கையே இருந்திருக்காது. ஒவ்வொரு கிறிஸ்து பிறப்புத் திருநாளும் - இம்மானுவேல் - தேவன் நம்முடன், என்னும் பரிசை நமக்கு நினைவுபடுத்துகிறது. நம்முடன் தேவன் இருக்கிறார் என்ற பரிசு தான் நமக்குத் தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்கிறது. இப்போதில் இருந்து நித்திய காலம் வரை, நாம் ஒரு போதும் தனிமையாக இல்லை. இது கொண்டாடுவதற்கு ஏற்ற காரணம் தான்.

ஈஸ்டர் - மரணத்தின் மீது ஜெயம்
5 நாட்கள்
இந்த 5 நாள் திட்டத்தின் வழியாக ஈஸ்டரின் உண்மையான அர்த்தத்தை அறிவோம். நாம் வாழ்வதற்காக இயேசு பெரும் துயரங்களையும் மரணத்தையும் கூட சகித்தார். இயேசு கிறிஸ்துவில் நாம் பெற்றிருக்கும் மரணத்தின் மீதான இந்த வெற்றியை அனுபவிக்க நீங்கள் தயாரா? உங்கள் வாழ்க்கை மறுரூபமாகும்!

சிலுவையும் கிரீடமும்
7 நாட்கள்
இயேசு கிறிஸ்து, அவர் தன் சிலுவை மரணத்தின் மூலம் பெற்றுத் தந்த இரட்சிப்பு, மற்றும் உயிர்த்தெழுதலின் வாக்குத்தத்தம் ஆகியவற்றை நாம் அறிந்துக் கொள்ளவே புதிய ஏற்பாட்டின் அதிகப்பட்சமான பகுதி எழுதப்பட்டுள்ளது. இயேசுவின் விலைமதிப்பற்ற இரத்தம், உயிர்த்தெழுதல், மற்றும் உங்களுக்காக பெற்று தந்த நித்திய வாழ்க்கையாகிய பரிசு ஆகியவற்றை இந்த தியானத்தில் டாக்டர். சார்ல்ஸ் ஸ்டான்லி அவர்கள் பகிர்ந்துள்ளார். அவருடன் இணைந்து, இயேசு செலுத்திய விலையை நினைவுக்கூறுவோம், தந்தையின் மகத்தான அன்பின் ஆழத்தை கொண்டாடுவோம்.

நடுவிலிருந்த சிலுவையில் தொங்கிய மனிதன்- ஒரு 7-நாள் உயிர்த்தெழுதல் தியானம்
7 நாட்கள்
இந்த உலகம் உடைந்துவிட்டது என்பதை கிட்டத்தட்ட அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். ஆனால் ஒரு தீர்வு இருந்தால் என்ன செய்வது? இந்த ஏழு நாள் உயிர்த்தெழுதல் திட்டம் சிலுவையில் கள்ளனை தனித்துவமான அனுபவத்துடன் தொடங்கி ஒரு அப்பாவி மனிதனின் மரணதண்டனையில் எவ்வாறு உடைக்கப்படுவதின் பதில் கிடையது: தேவகுமாரன் இயேசுவால் என்று சொல்கிறது.

பரிசுத்த உணர்ச்சிகள் - ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள்
30 நாட்கள்
தேவன் உங்களைப் படைத்து, இந்த நேரத்தில் உங்களை உருவாக்கினார், அன்பில்லாதவர்களை நேசிக்கவும், கொந்தளிப்பில் அமைதியைப் பிரதிபலிக்கவும், ஒவ்வொரு சூழ்நிலையிலும் எதிர்மறையான மகிழ்ச்சியைக் காட்டவும். இது சாத்தியமற்றதாகத் தோன்றலாம், ஆனால் உங்கள் இயல்பான மனித உணர்ச்சிகளைப் பற்றியும் அவற்றை எவ்வாறு நிர்வகிப்பது என்றும் வேதாகமம் என்ன சொல்கிறது என்பதைக் கற்றுக்கொள்வதன் மூலம் இதைச் செய்யலாம். ஒவ்வொரு நாளும் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் சாதாரண மற்றும் சில சமயங்களில் அசாதாரணமான சவால்களை இந்த தியானம் உள்ளடக்கியது, மேலும் உங்கள் உணர்ச்சிகளை தெய்வீக வழியில் எவ்வாறு நிர்வகிப்பது என்பது பற்றிய வேதகமாக் குறிப்புகளை வழங்குகிறது.