வாசிப்புத் திட்டங்கள்

இலவச வாசிப்பு திட்டங்கள் மற்றும் தியானங்கள் சார்ந்த எசேக்கியேல் 37:5

ஒரு புதிய ஆரம்பம்

ஒரு புதிய ஆரம்பம்

4 நாட்களில்

இந்த வேதாகம திட்டம் நம்பிக்கை, விசுவாசம் மற்றும் தேவனின் தெய்வீக ஆளுமை ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி ஒரு பயணத்தை தொடங்க இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் தேவன் மீது ஆழமான நம்பிக்கையை வைத்து பயத்தை வெல்வதன் மூலம், ஒரு புதிய கண்ணோட்டத்தைப் பெறுவதன் மூலமும், வாழ்க்கை மேலும் இறுதியான சத்துரு என்னும் மரணத்தின் மீதும் அதன் சக்தியையும் கூட வென்றுவிடலாம். கடினமான காலங்களில் நம்பிக்கையைக் புதுப்பித்தலின் மூலம் தேவனின் வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள இந்தத் திட்டம் உங்களை ஊக்குவிக்கும். புதுப்பிக்கப்பட்ட நோக்கத்தோடு கூடிய மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கையின் பலத்தோடு எதிர்காலத்தை நோக்கி அடியெடுத்து வைப்போம்.

பாகால்பிராசீம்   2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

பாகால்பிராசீம் 2சாமு.5:20 = பெருவளர்ச்சி+தடைமுறிவு+திருப்புதலின் சம்பவங்கள்- சகோதரன் சித்தார்த்தன்

5 நாட்களில்

எரேமியா 29:11 ....அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே. இன்றைய தேவை - சமாதானத்துக்கான நினைவுகள்; நம்பிக்கை ; சொன்னபடி நிறைவேறும் வாக்குகள் – இவை நமக்கு சர்வலோகத்தை ஆட்சி செய்யும் தேவாதி தேவனின் சர்வவல்ல கரத்தால் மட்டுமே சம்பவமாக்கித் தரமுடியும். ஏன் இந்த வலி, வேதனைகள், நோய்கள், இழப்புகள்....காரணம் : சத்துரு -அவன் எப்படிப்பட்டவன்: திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். (யோவான்:10:10) தீர்வும் இந்த 10 ஆம் வசனத்திலேயே இயேசு தருகிறார்: நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். இயேசு யார்- இன்றைக்கு எனக்கு நன்மை செய்கிறவர்; பிசாசிடம் அகப்பட்ட என்னை குணப்படுத்துகிறவர். அப்போஸ்தலர் 10:38 நமது இன்றைய சமாதானத்துக்கேதுவான நினைவுகள்: பலவருடங்களாக நமக்கு பாரமாக இருந்த பாரம் திடீரென எடுபட்டு போகும்;இருதயத்தின் ஒரு மூலையில் நாம் முணுமுணுத்துக் கொண்டிருந்த விருப்பத்திற்கு பதில் –நாம் கற்பனை செய்தும் பார்த்திராத விதத்தில் கிடைக்கும்