அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:17-18
அப்போஸ்தலருடைய நடபடிகள் 11:17-18 TRV
எனவே, ஆண்டவர் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்தவர்களாகிய நமக்குக் கொடுக்கப்பட்ட அதே வரத்தை இறைவன் அவர்களுக்கும் கொடுத்தார் என்றால் இறைவனைத் தடுக்கின்ற வல்லமை எனக்கு உண்டோ?” என்றான். யூத விசுவாசிகள் இதைக் கேட்டபோது, அதற்குமேல் அவர்களுக்கு மறுப்பு ஏதும் இருக்கவில்லை, யூத விசுவாசிகள் இறைவனைத் துதித்து, “அப்படியானால் இறைவன் யூதரல்லாத மக்களுக்கும் வாழ்வு கொடுக்கும் மனந்திரும்புதலைக் கொடுத்திருக்கிறார்!” என்றார்கள்.