YouVersion Logo
Search Icon

சங் 61

61
சங்கீதம் 61
நரம்புக் கருவிகளை இசைக்கும் இசைத் தலைவனுக்கு தாவீது அளித்த பாடல்களில் ஒன்று.
1தேவனே, நான் கூப்பிடுகிறதைக் கேட்டு,
என்னுடைய விண்ணப்பத்தைக் கவனியும்.
2என்னுடைய இருதயம் தளர்ந்துபோகும்போது
பூமியின் கடைசியிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்;
எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
3நீர் எனக்கு அடைக்கலமும்,
எதிரிகளுக்கு எதிரே பெலத்த துருகமுமாக இருந்தீர்.
4நான் உம்முடைய கூடாரத்தில் என்றென்றும் தங்குவேன்;
உமது இறக்கைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா)
5தேவனே, நீர் என்னுடைய பொருத்தனைகளைக் கேட்டீர்;
உமது பெயருக்குப் பயப்படுகிறவர்களின் சுதந்தரத்தை எனக்குத் தந்தீர்.
6ராஜாவின் ஆயுசு நாட்களோடு நாட்களைக் கூட்டுவீர்;
அவர் வருடங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும்.
7அவர் தேவனுக்கு முன்பாக என்றென்றைக்கும் நிலைத்திருப்பார்;
தயையும் உண்மையும் அவரைக் காக்கக் கட்டளையிடும்.
8இப்படியே தினமும் என்னுடைய பொருத்தனைகளை நான் செலுத்தும்படியாக,
உமது பெயரை என்றைக்கும் புகழ்ந்து பாடுவேன்.

Currently Selected:

சங் 61: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in