YouVersion Logo
Search Icon

சங் 30

30
சங்கீதம் 30
ஆலயத்தின் அர்ப்பணிப்பின் பாடல். தாவீதின் பாடல்.
1யெகோவாவே,
என்னுடைய எதிரிகள்
என்னை மேற்கொண்டு அவர்களை மகிழவிடாமல்,
நீர் என்னைக் கைதூக்கி எடுத்தபடியினால்,
நான் உம்மைப் போற்றுவேன்.
2என் தேவனாகிய யெகோவாவே,
உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்,
என்னை நீர் குணமாக்கினீர்.
3யெகோவாவே, நீர் என் ஆத்துமாவைப் பாதாளத்திலிருந்து ஏறச்செய்து,
நான் குழியில் இறங்காதபடி என்னை உயிரோடு காத்தீர்.
4யெகோவாவுடைய பரிசுத்தவான்களே,
அவரைப் புகழ்ந்துபாடி,
அவருடைய பரிசுத்தத்தின் நினைவு கூருதலைக் கொண்டாடுங்கள்.
5ஏனெனில் அவருடைய கோபம் ஒர் இமைப்பொழுதே,
அவருடைய தயவோ வாழ்நாள் முழுவதும்;
மாலையில் அழுகை வரும்,
அதிகாலையிலே மகிழ்ச்சி உண்டாகும்.
6நான் எப்போதும் அசைக்கப்படுவதில்லையென்று,
நான் வளமுடன் இருக்கும்போது சொன்னேன்.
7யெகோவாவே, உம்முடைய தயவினால்
நீர் என்னுடைய மலையை வலிமையாக நிற்கச்செய்திருந்தீர்;
உமது முகத்தை நீர் மறைத்துக்கொண்டபோதோ நான் கலங்கினவனானேன்;
8நான் கல்லறையில் இறங்கும்போது என்னுடைய இரத்தத்தால் என்ன லாபமுண்டு?
புழுதி உம்மைத் துதிக்குமோ?
அது உமது சத்தியத்தை அறிவிக்குமோ?
9யெகோவாவே, நீர் எனக்குச் செவிகொடுத்து
என்மேல் இரக்கமாக இரும்;
யெகோவாவே, நீர் எனக்குச் சகாயராக இரும் என்று சொல்லி;
10யெகோவாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன்;
யெகோவாவை நோக்கிக் கெஞ்சினேன்.
11என்னுடைய புலம்பலை ஆனந்த சந்தோஷமாக மாறச்செய்தீர்;
என்னுடைய மகிமை அமைதியாக இல்லாமல்
உம்மைப் புகழ்ந்து பாடும்படியாக
நீர் என்னுடைய சணலாடையை களைந்துபோட்டு,
மகிழ்ச்சியினால் என்னை உடுத்தினீர்.
12என் தேவனாகிய யெகோவாவே,
உம்மை என்றென்றைக்கும் துதிப்பேன்.

Currently Selected:

சங் 30: IRVTam

Highlight

Share

Copy

None

Want to have your highlights saved across all your devices? Sign up or sign in

YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy