1
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:7
பரிசுத்த பைபிள்
அச்சத்தின் ஆவியை தேவன் நமக்குத் தராமல், சக்தியும், அன்பும், சுயக்கட்டுப்பாடும் உள்ள ஆவியையே தந்திருக்கிறார்.
Compare
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:7
2
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:9
தேவன் நம்மைக் காத்து தனது பரிசுத்த மக்களாக்கினார். இது நமது முயற்சியால் நிகழ்வதன்று. இது தேவனால் ஆவது. தம் கிருபையால் நம்மை அழைப்பது அவரது திட்டமாக இருந்தது. அவர் தனது கிருபையை இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே படைப்பு காலத்திற்கு முன்பிருந்தே வழங்குகிறார்.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:9
3
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:6
ஆகவேதான், தேவன் உனக்குக் கொடுத்த வரத்தை நீ நினைத்துப் பார்க்கவேண்டும் என்று விரும்புகிறேன். நான் எனது கையை உன் மேல் வைத்தபோதுதான் தேவன் அந்த வரத்தைக் கொடுத்தார். இப்பொழுது அந்த வரத்தைப் பயன்படுத்த வேண்டும். அது சிறு தீப்பொறி எரிந்து பெருநெருப்பாவதுபோல வளரவேண்டும் என விரும்புகிறேன்.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:6
4
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:8
எனவே கர்த்தராகிய இயேசுவைப் பற்றி மக்களிடம் எடுத்துச் சொல்ல வெட்கப்பட வேண்டாம். என்னைக் குறித்தும், நான் கர்த்தருக்காகச் சிறையில் இருப்பது குறித்தும் வெட்கப்பட வேண்டாம். ஆனால் நற்செய்திக்காக என்னோடு துன்பத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். அதற்கான பலத்தை தேவன் தருகிறார்.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:8
5
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:12
நற்செய்தியைப் பரப்பிக்கொண்டிருப்பதால் இப்போது துன் பப்படுத்தப்படுகிறேன். இதற்காக நான் வெட்கப்படவில்லை. நான் நம்புகிற இயேசுவைப்பற்றி எனக்குத் தெரியும். என்னிடத்தில் நம்பி ஒப்படைத்தவற்றை அந்த நாள்வரைக்கும் காத்துக்கொள்ளும் வல்லமை இயேசுவுக்கு உண்டு. இதனை நான் உறுதியாக நம்புகிறேன்.
Explore தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாம் கடிதம் 1:12
YouVersion uses cookies to personalize your experience. By using our website, you accept our use of cookies as described in our Privacy Policy
Home
Bible
Plans
Videos